மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மகளிர் குழு பெண்கள் மஜகவில் இணைந்தனர்..!!


சென்னை., ஜன.30

மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக சென்னை, துறைமுகம் பகுதியில் தமிழ்த்தாய் சுய உதவி குழு என்ற மகளிர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்குழுவை சேர்ந்த பெண்கள் குழுவின் தலைவி விஜயகாந்தி தலைமையில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் துறைமுக பகுதி நிர்வாகிகள் அசன் அலி, அபூபக்கர், தாஹா, ராயபுரம் பகுதி நிர்வாகி தமீம் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#MJK2021
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்.
30.01.2021